PAGE 10

வெள்ளைப் பூண்டு :

நாம் தினசரி சமையலில் பூண்டை அளவாக பயன்படுத்தினாலே போதும் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்


1)நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது,

2)இரத்தத்தில் வெள்ளை அணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது,

3)உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது

4)இரத்தத்தை தூய்மை படுத்துகிறது,

5)மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது,

6)உடல் பருமன் குறைக்க உறுத்துணை புரிகிறது( HDL = LDL ),

7)உடலில் நல்ல கொலாஸ்டிரல் HDL உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

8)இரத்த குழாய்களில் LDL கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்கும்

9)சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்கிறது,

10)வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது,

11)அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது,

12)புளிப்பு சேருவதால் உண்டாகும் வயிற்று எரிச்சலைபோக்குகிறது,

13)வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

14)நன்கு பசியைத் தூண்டும்.

15)குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது

16)மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

17)வியர்வையை பெருக்கி கழிவுகளி வெளியேற்றுகிறது,

18)பித்தம் ஏற்படாமல் தடுக்கிறது,

19)ஒற்றைத்தலைவலியை போக்குகிறது,

20)மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது

21)கருப்பையை வலுப்படுத்தும்.

22)சோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது,

23)மூளையை பலம்பெறச் செய்கிறது

24)சளித்தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது,

25)தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது,

26)தாய்ப்பாலை விருத்தி செய்ய செய்கிறது,

27)கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது,

28)தாதுவை விருத்தி செய்யும். விந்துவைக் கெட்டிப்படுத்தும்.

29)(சக்கரை) நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது,

30)தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.


பூண்டை உபயோகப்படுத்தும் முறை :

1)பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

2)நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுதுங்கள்.சைனா பூண்டை விட
நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது

3)பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை போன்ற வடிவில் சாப்பிடுவதை விட நேரடியாக சாப்பிடுவதே நல்லது

4)பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது.அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

5)பூண்டின் காரம் போக சிறிது மோர் அருந்தலாம் இல்லை என்றாலும் ஒன்றும் பாதிப்பிலை

6)அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல ரோம்பவும் அதிகமாக சேர்த்துக் கொல்லாதீர்கள்

7)தினசரி ஒரு நபருக்கு ஆறு பல்லு விதம் கணக்கிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.
_____________________________________________________________________________________________________

அக்குள் கருமையாக இருக்கிறதா?

தற்கால ஃபேஷன் ஆடைகள் எல்லாம் ஸ்லீவ்லெஸ் ஆகவே வருகின்றன. அக்குள் கருமையாக இருப்பவர்களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை.

இவ்வுலகில் இயற்கை வைத்தியத்திற்கு இருக்கும் சக்தி வேறு எந்த ஒரு பொருளுக்கும் கிடையாது.

இதோ உங்களுக்காக சில சூப்பர் டிப்ஸ்!


01. எலுமிச்சை

அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். ஏனெனில் அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

02. மஞ்சள், தயிர்

மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்குளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போக்கலாம்.


03. தயிர், எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

04. உருளைக்கிழங்கு

இது மிகவும் எளிமையான ஒரு ஸ்கரப். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து, அதனை தினமும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய்து, பின் குளித்தால், கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம்.

05. குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகிவிடும்.
_______________________________________________________________________________________________

* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
_______________________________________________________________________________________________